Tamil News
Home உலகச் செய்திகள் வானிலையாளர்கள் புதிய ஏலியன் சிக்னல்களை கண்டுபிடித்துள்ளனர்

வானிலையாளர்கள் புதிய ஏலியன் சிக்னல்களை கண்டுபிடித்துள்ளனர்

தற்பொழுது வானிலையாளர்கள் புதிய எட்டு ஏலியன் சிக்னல்களை கண்டறிந்துள்ளனர் என்ற செய்தி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் 2007ஆம் ஆண்டு வானியலாளர்கள் நமது விண்மீன் மண்டலத்திற்கு அப்பால் இருந்து வெளிவரும் உயர் ஆற்றல் வானொலி சிக்னல் ஒன்றை கண்டுபிடித்திருந்தனர்.

சரியான அடையாளம் இல்லாமல் விண்வெளியில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த வானொலி சிக்னல்களை ஏலியன் சிக்னல் என தீர்மானித்துக் கொண்டனர். பின்னர் இந்த சிக்னல் பற்றி விஞ்ஞானிகள் ஆராயத் தொடங்கினர்.

டசின் கணக்கான FRB  எனப்படும் ஃபாஸ்ட் ரேடியோ பர்ஸ்ட் (Fast radio bursts) சிக்னல்களை கண்டறிந்துள்ளனர். இவை விண்வெளியில் கண்டறியப்பட்டுள்ள ஏலியன் சிக்னல்களாகும்.

ஒருமுறை இந்த சிக்னல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரே அண்டில் இரண்டு முறை இந்த ஏலியன் சிக்னல்களை வானிலையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எவ்வித காரணமின்றி விண்வெளியில் சுற்றித் திரியும் இந்த வானொலி சிக்னல்கள் அந்நிய கிரகத்தின் ஏலியன் செய்தியாக இருக்கலாம் என்று ஊகிக்கத் தொடங்கி ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவாக, தற்போது எட்டு புதிய FRB ஏலியன் சிக்னல்கள் நமது விண்மீன் மண்டலத்திற்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வானிலையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய FRB ஏலியன் சிக்னல்கள் ஒருமுறை மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஏழாவதாக கண்டுபிடிக்கப்பட்ட FRB ஏலியன் சிக்னல் மூன்று முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எட்டாவதாக கண்டுபிடிக்கப்பட்ட FRB ஏலியன் சிக்னல் சுமார் 10முறை தொடர்ச்சியாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ஏலியன் சிக்னல்களுக்கு பின்னால் உள்ள செய்திகளைக் கண்டறியும் புதிய முயற்சியில் தற்போது வானியலாளர்கள், மற்றும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். எட்டு FRB சிக்னல்கள் பற்றிய உண்மை அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version