Tamil News
Home செய்திகள் வடமராட்சியில் மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை

வடமராட்சியில் மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் தங்கியிருந்து கடலட்டைபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் வெளிமாவட்ட மீனவர்கள் 09 பேருக்கு கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் பி சீ ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் 70 பேர் வாடிகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் இலங்கை கடல் எல்லையைத் கடந்து இந்தியக் கடல் எல்லைக்குள் சென்று, இந்திய மீனவர்களது றோலர் படகுகளில் ஏறி தங்கியிருந்துள்ளதுடன் இந்திய தமிழ்நாட்டுப் பகுதிக்குள் சென்று வந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில், அவர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்த பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version