Tamil News
Home உலகச் செய்திகள் லிபியாவின் முன்னாள் பிரதமர் கொரோனாவிற்கு பலி

லிபியாவின் முன்னாள் பிரதமர் கொரோனாவிற்கு பலி

லிபியாவின் முன்னாள் பிரதமர் மகமூட் ஜெப்ரில் கொரேனோ நோயினால் பாதிக்கப்பட்டு எகிப்தில் உள்ள வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் 26 ஆம் நாள் அவருக்கு நோய் ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டதாக அவரின் கட்சியான தேசிய படைக் கூட்டணி தெரிவித்துள்ளது. 1952 ஆம் ஆண்டு பிறந்த அவர் மேற்குலக நாட்டில் அரசியல் கல்வியை நிறைவு செய்திருந்தார்.

2011 ஆம் ஆண்டு லிபியாவில் அதிபர் கேணல் கடாபிக்கு எதிராக மேற்குலக நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது தேசிய இடைக்கால சபையின் பக்கம் சென்றிருந்தார். 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் அவரின் கட்சி போட்டியிட்டிருந்தது.

Exit mobile version