Tamil News
Home உலகச் செய்திகள் ரஷ்யாவிடமிருந்து 33 அதிநவீன போர் விமானங்களை வாங்கும் இந்தியா

ரஷ்யாவிடமிருந்து 33 அதிநவீன போர் விமானங்களை வாங்கும் இந்தியா

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகின்றது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நீடித்து வருகின்றது. இத்தகைய சூழலில், விமானப்படையை வலுப்படுத்தும் விதமாக ரஷ்யாவிடமிருந்து புதிதாக போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. அதன்படி ரஷ்யாவிடம் இருந்து 21 மிக்-29 ரக போர் விமானங்களையும், 12 சுகோய்-30 ரக அதிநவீன போர் விமானங்களையும் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு வசம் உள்ள சுகோய்-30 விமானங்கள் சேதமடைந்துள்ள காரணத்தினால், 12 சுகோய்-30 ரக அதிநவீன போர் விமானங்களை வாங்க உள்ளதாக இந்திய விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version