Tamil News
Home செய்திகள் யாழ் மாநகர சபை முதல்வராக இமானுவேல் ஆனோல்டினை நியமிக்க கூட்டமைப்பு முடிவு

யாழ் மாநகர சபை முதல்வராக இமானுவேல் ஆனோல்டினை நியமிக்க கூட்டமைப்பு முடிவு

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் தெரிவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இமானுவேல் ஆனோல்டினை முதல்வர் தெரிவுக்கு நியமிப்பதாக இன்றைய தினம் தமிழ் தேசியகூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

இன்று இலங்கை தமிழரசுக்கட்சியின்யாழ்ப்பாண அலுவலகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள்மற்றும் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்துள்ளார்

நாளை காலை ஒன்பது முப்பது மணி அளவில் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் தெரிவு இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version