Tamil News
Home செய்திகள் யாழ்.இந்துக் கல்லூரி அதிபர் கையூட்டு பெற்றமைக்காக கைது

யாழ்.இந்துக் கல்லூரி அதிபர் கையூட்டு பெற்றமைக்காக கைது

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலன், கையூட்டு பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கையூட்டுப் பெற்றுக்கொண்டமைக்கான போதிய ஆதாரங்களுடன் இன்று அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் அனுமதிக்காக 50 ஆயிரம் ரூபாய் கையூட்டுப் பெற்றுக் கொண்டதற்கான உரிய ஆதாரத்துடன் அதிபர் சதா நிமலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version