Tamil News
Home செய்திகள் யார் பொய் கூறுவது? அமெரிக்காவா? சிறீலங்காவா?

யார் பொய் கூறுவது? அமெரிக்காவா? சிறீலங்காவா?

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு தேவையான நிதி எதுவும் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கவில்லை என சிறீலங்கா பிரதமர் மகிந்தா ராஜபக்சா கடந்த செவ்வாய்க்கிழமை (4) இடம்பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் பேசும் போது தெரிவித்திருந்தார்
ஆனால் தாம் ஏப்பிரல் 9 ஆம் நாள் 1.3 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கோவிட்-19 வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக சிறீலங்கா அரசுக்கு மேலும் 4.5 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கவுள்ளதாக சிறீலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா தெப்லிஸ் தொவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை (5) சிறீலங்கா பிரதமர் மகிந்தா ராஜபக்சாவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இந்த உதவியை வழங்கியுள்ளார்.

சிறீலங்காவின் பாதுகாப்பு, இறைமை ஆகியவற்றிற்கு ஆதரவு அளிபதற்காக அமெரிக்க நீண்டகாலமாக இந்த உதவிகளை வழங்கிவருகின்றது. தற்போது கொரோனா வைரஸ் இற்கு எதிரான நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட மொத்த தொகை 5.8 மில்லியன் டொலர்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தர்.

ஏப்பில் 9 ஆம் நாள் அமெரிக்கா நிதியை வழங்கிய பின்னரும் சிறீலங்கா பிரதமர் நிதி கிடைக்கவில்லை என மே 4 ஆம் நாள் தெரிவித்துள்ளது பலத்த சந்தேகத்தை அரசியல் வட்டாரங்களில் எழுப்பியுள்ளது.

இந்த நிலையில் இவர்களில் யார் பொய் கூறுகின்றனர் என்ற கேள்வியை கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பியுள்ளது.

Exit mobile version