Home செய்திகள் யாழ். பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் கைது

யாழ். பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் கைது

பல்கலைக்கழகத்தில் நினைவுத்தூபி இடித்ததால் ஏற்பட்ட பதற்றத்தின் போது கைது செய்யப்பட்ட இரு மாணவர்கள் தொர்பாக யாழ்.மேயரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவிக்கையில்

7 1 யாழ். பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் கைது

பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் பல்கலைக்கழகத்தின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்படுவதாக தகவல் அறிந்து குறித்த பகுதிக்கு சென்றிருந்தேன். பல்கலைக்கழக மாணவர்களும் ஏனைய தமிழ் உணர்வாளர்களும் அந்த பிரதேசத்திலே கூடிக்கொண்டிருந்த பொழுது அங்கு நின்றிருந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கைது செய்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

இது குறித்து பொலிஸாரிடம் வினாவிய போது, அது குறித்து முழுமையான தகவல்களை அறிய முடியவில்லை. ஆனால் பல்கலைக்கழகத்திற்குள் அத்து மீறி நுழைய முற்பட்டதனால் அவர்களை கைது செய்து தாம் தடுத்துவைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்” என்றார்.

Exit mobile version