Home செய்திகள் முல்லைத்தீவில் போராட்டம்!

முல்லைத்தீவில் போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
mi5 முல்லைத்தீவில் போராட்டம்!

இந்த போராட்டத்தில் முல்லைத்தீவு கிளிநொச்சி வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் பங்கெடுத்துள்ளனர்.

குறித்த உறவுகளுக்கு போராட்டத்தில் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவப்பிரகாசம் சிவமோகன், திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

நன்றி
படங்கள் நிபோஜன்

Exit mobile version