Tamil News
Home செய்திகள் மீண்டும் ஏமாற்றப்பட்ட மலையக மக்கள்

மீண்டும் ஏமாற்றப்பட்ட மலையக மக்கள்

மலையக தேயிலைத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு 1000 ரூபாய்கள் ஊதியமாக வழங்கப்படும் என்று சிறீலங்காவின் புதிய அரசு தெரிவித்த வாக்குறுதிகள் மீண்டும் வழமைபோல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்துடன் பல சுற்று பேச்சுக்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் தற்போதைய கொரோனா வைரசின் நிலையை முன்நிறுத்தி சிறீலங்கா அரசும், முதலாளிமார் சம்மேளனமும் 1000 ரூபாயை ஊதியமாக வழங்கமுடியாது தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கடந்த நாலரை வருடங்களான பல வழிகளில் நாம் முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். ஆனால் ஊதிய உயர்வு விடயத்தில் எம்மால் முன்னேற்றம் காண முடியவில்லை என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version