Tamil News
Home செய்திகள் மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணியில் ”தேசத்தின் வேர்கள்” அமைப்பினர்

மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணியில் ”தேசத்தின் வேர்கள்” அமைப்பினர்

2019 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னிட்டு வடக்கு கிழக்கிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் சிரமதான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள், ”தேசத்தின் வேர்கள்” என்ற அமைப்பின் நிறுவுனர் கணேசன் பிரபாகரன் தலைமையில் இன்று (31)  மேற்கொள்ளப்பட்டது.

சிரமதானப் பணிகளை முடித்த பின்னர் கருத்துத் தெரிவித்த கணேசன் பிரபாகரன் தெரிவிக்கையில், மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படும் வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து துயிலுமில்லங்களிலும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

Exit mobile version