Tamil News
Home செய்திகள் மஹர சிறைச்சாலைக் கலவரம் – ராகம வைத்தியசாலையில் ஆறு சடலங்கைள்; 37 பேர் படுகாயம்

மஹர சிறைச்சாலைக் கலவரம் – ராகம வைத்தியசாலையில் ஆறு சடலங்கைள்; 37 பேர் படுகாயம்

மஹர சிறைச்சாலை வன்முறையை அடுத்து தமது வைத்தியசாலைக்கு 6 உடலங்கள் எடுத்து வரப்பட்டதாக ராகம வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

35 கைதிகளும், 2 சிறைக் காவலர்களும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையில் கலகம் ஏற்பட்டதை தொடர்ந்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றிரவு 9.55 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறைச்சாலையில் பாரிய தீ மூண்டுள்ளதை காணமுடிவதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தொலைவிலிருந்து பார்க்கும்போது பாரிய தீயை காணமுடிகின்றது துப்பாக்கி சத்தங்களும் கேட்டன என அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரங்களையடுத்து சிறைச்சாலைக்குள் பாரிய தீ ஏற்பட்ட போதிலும், தீ அணைப்புப் படைகளின் உதவியுடன் நேற்று நள்ளிரவுக்கு மேல் அது அணைக்கப்பட்டது.

Exit mobile version