Tamil News
Home செய்திகள் மற்றொரு சீன நாட்டவருக்கும் கொரோனா வைரஸ்?

மற்றொரு சீன நாட்டவருக்கும் கொரோனா வைரஸ்?

மாத்தறையில் அம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலை அமைப்புப் பணியில் ஈடுபடும் சீன நாட்டவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் காணப்படுவதனால் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சீன நாட்டவர் சூரியவெவ நவதகஸ் வெவ பகுதியில் சேவை செய்யும் போது திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர் தனி அறையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தச் சீன நாட்டவரின் நிலைமை தொடர்பில் கண்கானிப்பதற்காக அவரைக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

Exit mobile version