Tamil News
Home செய்திகள் மருத்து நீரை வீடுகளிலேயே தயாரித்து புதுவருடத்தை கொண்டாடுங்கள் பிரபாகரக்குருக்கள் தெரிவிப்பு

மருத்து நீரை வீடுகளிலேயே தயாரித்து புதுவருடத்தை கொண்டாடுங்கள் பிரபாகரக்குருக்கள் தெரிவிப்பு

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இம் முறை புதுவருடக் கொண்டாட்டங்களை வீடுகளிலேயே கொண்டாடுமாறு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.

வீடுகளில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி மருத்து நீரைத் தயாரித்து கோவில்களுக்கு வருவதைத் தவிர்த்து இயன்றவரை பாதுகாப்பான முறையில் உங்கள் இஷ்ட தெய்வங்களை வழிபட்டு மகிழ்வுடன் புதுவருடத்தை கொண்டாடுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை 14 ஆம் திகதி கோவில்களுக்கு வருபவர்கள் தங்களுடையதும் சமூகத்தினுடையதும் நலனைக்கருததில் கொண்டு முகக்கவசங்களை அணிவதுடன் கோவில்களில் சமூக இடைவெளியை பின்றபற்றுமாறும் கோரியுள்ளார்.

Exit mobile version