Tamil News
Home உலகச் செய்திகள் மனித கடத்தலில் சிக்கிய இந்தோனேசியர்கள் நாடு திரும்பியுள்ளனர்

மனித கடத்தலில் சிக்கிய இந்தோனேசியர்கள் நாடு திரும்பியுள்ளனர்

மனித கடத்தலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களாக அறியப்படும் 43 இந்தோனேசியர்கள் சிரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலிருந்து சொந்த நாடான இந்தோனேசியாவுக்கு திரும்பியிருக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இந்தோனேசிய பிரதிநிதிகளின் ஏற்பாட்டின் மூலம் இந்த 43 பேரும் இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என இந்தோனேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் Retno Marsudi தெரிவித்துள்ளார்.
Exit mobile version