Tamil News
Home செய்திகள் மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி வேட்புமனுவினை தாக்கல் செய்தது 

மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி வேட்புமனுவினை தாக்கல் செய்தது 

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை இன்று தாக்கல் செய்தது.இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் இன்று வேட்பு முன தாக்கல்செய்யப்பட்டது

மட்டக்களப்ப மாவட்டத்தில் கொரணா அச்சுறுத்தல் நிலவும் நிலையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் பங்காளி கட்சிகளின் வேட்பாளர்கள் சகிதம் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டது.

இன்று மாவட்ட செயலகத்தில் உள்ள வேட்பு மனு தாக்கல் செய்யும் பகுதியில் கொரணா தடுக்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்யபவருவோருக்கும் கொரணா தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமை வேட்பாளராக கொண்டு கொண்டு எட்டு உறுப்பினர்கள் கட்சியில் போட்டியிடுகின்றனர்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் ஐந்து பேரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் மூன்று பேரும் புளோட் சார்பில் ஒருவரும் வேட்பு மனுவினை தாக்கல் செய்தனர்.

வேட்பு மனுத்தாக்கல் முடிந்த பின்னர் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

Exit mobile version