Tamil News
Home செய்திகள் மகிந்தாவின் காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை

மகிந்தாவின் காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை

2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் பற்றி விசாரணை நடத்தும் குழு மாத்தள விமான நிலையத்திற்கு ஆய்வுக்காக செல்கின்றது.

குறித்த விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்திற்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா?  என்பது குறித்து ஆராய்வதற்காக இந்தக் குழு அங்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதால் கட்டடத்தின் பல்வேறு பிரிவுகள் பாதிக்கப்பட்டிருப்பதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த விசாரணை இடம்பெறவுள்ளது.

குறித்த மோசடி தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு அதிகாரிகளும், அரச மதிப்பீட்டு திணைக்களத்தின் அதிகாரிகளுமே இந்த ஆய்வுக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

Exit mobile version