Tamil News
Home செய்திகள் பொதுத் தேர்தல் நடப்பது உறுதி; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

பொதுத் தேர்தல் நடப்பது உறுதி; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

கொரோனா தொற்றினால் பொதுத்தேர்தல் இரத்து செய்யப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் இரத்து செய்யப்படவுள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு இதுவரை அவ்வாறான தீர்மானமொன்றை எடுக்கவில்லை எனச் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார். அத்துடன் தேர்தல் காலங்களில் மக்கள் கூடும் இடங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழு சுகாதார அமைச்சுடன் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளது.

தேர்தல் கூட்டங்கள் இடம்பெறும் இடங்களில் கொரொனா தொற்று பரவுவதைத் தடுக்க சுகாதார அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சமன் ஸ்ரீ ரத்னப்பிரிய குறிப்பிட்டார்.

Exit mobile version