Tamil News
Home செய்திகள் புதிய அரசியலமைப்பில் ’13’க்கு முடிவு கட்டப்படும்; விமல் வீரவன்ச சொல்கின்றார்

புதிய அரசியலமைப்பில் ’13’க்கு முடிவு கட்டப்படும்; விமல் வீரவன்ச சொல்கின்றார்

“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமும் 19ஆவது திருத்தச் சட்டமும் நாட்டுக்குச் சாபக்கேடாக அமைந்துள்ளன. இரண்டுக்கும் புதிய அரசமைப்பில் முடிவு காணப்படும். 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தற்காலிக ஏற்பாடேயாகும்” என அமைச்சரும் கொழும்பு மாவட்ட எம்.யுமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை சிறப்புத் தூதுவர் மூலம் கையாள இந்தியா முயற்சிக்கின்றது என வெளிவந்த செய்தி தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

“புதிய அரசமைப்பில் 13ஆவது திருத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றே நம்புகின்றோம். இதில் நாம் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றோம். இதில் இந்தியா தலையிடுவதால் எந்தப் பயனும் இல்லை. இந்த நாட்டில் இனப்பிரச்னை தொடர 13ஆவது திருத்தமும் ஒரு காரணமாக இருக்கின்றது.

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமும் 19ஆவது திருத்தச் சட்டமும் நாட்டுக்குச் சாபக்கேடாக அமைந்துள்ளன. இரண்டுக்கும் புதிய அரசமைப்பில் முடிவு காணப்படும். நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தற்காலிக ஏற்பாடே. அதன்பின்னர் வரவுள்ள புதிய அரசமைப்பு ஆபத்தான திருத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். எனவே, புதிய அரசமைப்பில் இந்தியா விரும்பும் 13ஆவது திருத்தத்தின் பரிந்துரைகளை உட்புகுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேமாட்டாது” என்றார்.

Exit mobile version