Tamil News
Home செய்திகள் பிரித்தானியா துடுப்பாட்ட மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான கோசம்

பிரித்தானியா துடுப்பாட்ட மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான கோசம்

சிறீலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை (06) இடம்பெற்ற உலகக் கோப்பைக்கான துடுப்பாட்ட போட்டியின் போது இந்தியாவுக்கு எதிரான கோசங்களைத் தாங்கிய விமானம் வானில் பறந்தது தொடர்பில் இந்திய துடுப்பாட்ட சபை அனைத்துலக துடுப்பாட்ட சபையிடம் தனது முறைப்பாட்டை தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியில் துடுப்பாட்டப் போட்டி இடம்பெற்றவேளையில் வானில் பறந்த விமானம் “காஷ்மீரில் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும்” “ கஷ்மீரில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு நீதி வேண்டும்” என்ற வாசகங்களை தாங்கியவாறு பறந்து சென்றிருந்தது.

இந்த நடவடிக்கை தொடர்பில் இந்தியா அதிக சீற்றம் அடைந்துள்ளதுடன், தனது துடுப்பாட்ட அணியினருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மூன்று தடவைகள் விமானங்கள் வெவ்வேறு வாசகங்களைத் தாங்கியவாறு பறந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version