Tamil News
Home செய்திகள் பிரபாகரன் காலத்தில் மக்களிடம் அச்சம் இல்லை ராஜபக்ச

பிரபாகரன் காலத்தில் மக்களிடம் அச்சம் இல்லை ராஜபக்ச

பிரபாகரன் காலத்தில் மக்கள் அச்சமின்றி மத வழிபாடுகளை மேற்கொண்டதாக    ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலுக்காக பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகிந்தா , தற்போது நாட்டில் கோவில், பள்ளிகள், தேவாலயங்களுக்குக் கூட மக்கள் அச்சமின்றி செல்ல முடியாத நிலைமை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆயுத போராட்டம் உச்சத்தில் இருந்த போதும், பிரபாகரன் இருந்த போதும் கூட மக்களிடம் இந்த பயம் இருக்கவில்லை என்றும், தற்போதைய அரசாங்கத்திடம் எதை கூறினாலும் அதை கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இலங்கையில் நடந்தது போர்குற்றம் மட்டும் அல்ல திட்டமிட்ட இனபடுகொலை.   ஒவ்வொரு சிங்கள தலைமைகளும்  தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையை நிகழ்த்துகிறார்கள் ,

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கான ஆயுதங்கள் மே மாதம் 2009 இல் மௌனிக்கப்பட்டது. இந்நிலையில் ஜ.நா. பிரதிநிகள், மற்றும் அமெரிக்கா, இந்தியா, நோர்வே போன்ற பல சர்வதேச நாடுகள் கொடுத்த வாக்குகளிற்கமைய பல்லாயிரக்கணக்கான போராளிகளும் பொதுமக்களும் சிங்கள இனவாத அரசின் படுகொலை இராணுவத்திடம் சரணடைந்தனர். இவர்களில் 146679 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். இதற்க்கு  ராஜபக்ச  தான் முழு பொறுப்பாளி என்பது  நிதர்சனம்.

Exit mobile version