உலகை உலுக்கும் கொரோனா தொற்று ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்காவால் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இருப்பினும் தற்போதுவரை 189 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்றுவரை 89 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவபீட பீடாதிபதி ரவிராஜ் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.