பருவநிலை மாற்றம் பண்டைய சிந்து சமவெளி நாகரீகம் அழிவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிஷாந்த் மாலிக் என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலுள்ள ரோசெஸ்டர் தொழில்நுட்பக் கழகத்தில் ஆய்வாளராக உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குறித்த ஆய்வாளர், 5,700 ஆண்டுகளுக்கான தரவுகளை ஆய்வு செய்து வந்துள்ளார். பருவநிலை மாற்றம் பண்டைய சிந்து சமவெளி நாகரிகம் அழிவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளார். இது குறித்து அவர் கருத்து வெளியிடுகையில்,
தெற்காசிய குகைகளின் பொங்கூசிப் பாறைக் கனிமப் படிவுகளில் ஒரு குறிப்பிட்ட வகை இரசாயன இருப்பின் அளவை கணக்கில் எடுத்துக் கொண்டோம். இதன் மூலம் கடந்த 5,700 ஆண்டுகளில் அப்பகுதியில் பருவமழையின் அளவு பற்றிய தொகுதியை உருவாக்க முடிந்தது. ஆனால் பண்டைய கால பருவநிலை காலத் தொடரை இப்போதைய கணித மாதிரிகளில் கண்டுபிடித்து புரிந்து கொள்வது சவாலான பணியாக இருந்தது.