Tamil News
Home உலகச் செய்திகள் பயணக் கைதிகளை மீட்கும் இந்தியாவின் நடவடிக்கை தோல்வி

பயணக் கைதிகளை மீட்கும் இந்தியாவின் நடவடிக்கை தோல்வி

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கஸ்மீர் பகுதியில் கஸ்மீர் ஆயுதக் குழுவினரால் தடுத்துவைக்கப்பட்ட பயணக்கைதிகளை மீட்கும் இந்தியாவின் நடவடிக்கையில் நேற்று (3) 5 இராணுவத்தினரும், இரண்டு ஆயுதக்குழுவினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

கன்வாறா பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த 5 பேர் கொண்ட ஆயுதக் குழுவினர் பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடித்திருந்தனர். அவர்களை மீட்பதற்கு இந்திய இராணுவத்தின் படையணி ஒன்று கேணல் தலைமையில் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கியிருந்தது.

ஆனால் அங்கு இடம்பெற்ற மேதல்களில் இந்திய இராணுவத்தின் கேணல் மற்றும் மேஜர் தர அதிகாரிகள் உட்பட 4 இராணுவத்தினரும், ஒரு காவல்துறை அதிகாரியும் கொல்லப்பட்டதாக தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத இந்திய படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக அல்ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது.

எனினும் இரு ஆயுததாரிகள் கொல்லப்பட்டதுடன், பயணக்கைதிகள் மீட்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version