Tamil News
Home செய்திகள் பண்டிகை காலத்தில் முடக்கமா? விடுவிப்பா? – அடுத்த வாரம் முக்கிய முடிவு

பண்டிகை காலத்தில் முடக்கமா? விடுவிப்பா? – அடுத்த வாரம் முக்கிய முடிவு

கிறிஸ்மஸ் வார நீண்ட விடுமுறையில் மேல் மாகாணத்துக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ மற்றும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்துவதற்கு இதுவரை விரும்பவில்லை. எவ்வாறாயினும், பண்டிகை வார இறுதிக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் நிலைமை மறுபரிசீலனை செய்யப்படும் என இராணுவத் தளபதியும் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

“ஆனால், தற்போதுள்ள நிலை தொடர்ந்தால், எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது” எனவும் அவர் குறிப்பிட்டார். “இது எல்லாம் மக்களின் கைகளில் உள்ளது. அடுத்த ஏழு நாட்கள் அவகாசம். அதில் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version