Home செய்திகள் “பண்டாரம்-வன்னியனார்” வரலாற்று நூல்வெளியீடு

“பண்டாரம்-வன்னியனார்” வரலாற்று நூல்வெளியீடு

வரலாற்றாய்வாளர் அருணா செல்லத்துரையின் “பண்டாரம்-வன்னியனார்” வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டுவிழா நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று   இடம்பெற்றது.
ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாழ்த்துரையை  தேசிய கல்வியற்கல்லூரியின் ஓய்வுநிலை பீடாதிபதி க. சுவர்ணரயா நிகழ்த்தினார்.
IMG 0210 “பண்டாரம்-வன்னியனார்” வரலாற்று நூல்வெளியீடு
அதனைத் தொடர்ந்து நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலை சட்டத்தரணி சிற்றம்பலம் வெளியிட்டுவைக்க அதன் முதற்பிரதியை வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் வீ.ஜெகசோதிநாதன் பெற்றுக் கொண்டார்.
நூலிற்கான மதிப்பீட்டுரையை புளியங்குளம் ஆசிரியர் வாண்மைவிருத்தி நிலையத்தின் முகாமையாளர் சு.ஜெயச்சந்திரன் நிகழ்த்தியதுடன்,பதிலுரையை நூல் ஆசிரியரும், நன்றியுரையை மருத்துவர் செ.மதுரகனும் நிகழ்த்தியிருந்தனர்.
ஆய்வாளர் அருணா செல்லத்துரையின் வன்னி மண்சார்ந்த வரலாற்றாய்வு நூல்களில் இது 9நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
Exit mobile version