Tamil News
Home செய்திகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்படவில்லை போக்குவரத்து சபை

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்படவில்லை போக்குவரத்து சபை

கொரோனா வைரஸ் தொடர்பான அச்சுறுத்தல் காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அரசாங்கம் மூடுவதாக வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என சிவில் விமான போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

தற்போது யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மட்டுமே மூடப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் கட்டுநாயக்க விமான நிலையமும் மூடப்படும் என்ற அனைத்து வதந்திகளையும் அதன் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி நிராகரித்துள்ளார்.

மேலும் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து வசதிகளும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மூடுவது குறித்த முடிவு ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னர் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version