Tamil News
Home செய்திகள் நிறைவடையவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு நடவடிக்கைகள்

நிறைவடையவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு நடவடிக்கைகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் அடுத்த ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா களனியில் ஊடக சந்திப்பின் போது  தெரிவித்துள்ளார்

புலனாய்வு அதிகாரிகளின் புகைப்படங்கள் வெளியிடாமல் இருப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், பயங்கரவாத தாக்குதுல்களுக்கு ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் புலனாய்வு அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்றால், அது தொடர்பாக பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.

சாட்சியத்திற்காக பிரதமர், ஜனாதிபதி மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் சாட்சியங்கள் மிகவும் பெறுமதியானவை. சாட்சியமளித்த பின்னர் மீண்டும் தெரிவுக் குழுவிற்கு சிலர்  அழைக்கப்படவுள்ளனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

Exit mobile version