Tamil News
Home உலகச் செய்திகள் நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ள தமிழ் குடும்பம்

நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ள தமிழ் குடும்பம்

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அகதி குடும்பமான பிரியா-நடேஸ் தம்பதியின் இரண்டாவது மகள் தருணிகாவின் விண்ணப்பம் பாரபட்சமின்றி பரிசீலிக்கப்படவில்லை என பெடரல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக அவுஸ்திரேலிய அரசு தாக்கல்செய்த மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பிரியா குடும்பத்தின் சார்பில் அவர்களது சட்டத்தரணியால் தாக்கல்செய்யப்பட்ட மேன்முறையீடொன்றும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இருதரப்பினரும் தத்தம் மேன்முறையீடுகளில் தோல்வியடைந்துள்ளதால் இவ்விவகாரம் முடிவின்றித் தொடர்கிறது.

Exit mobile version