Tamil News
Home செய்திகள் தேர்தல் வெற்றிக்கான பிரார்த்தனைக்காக திருப்பதி செல்லும் ரணில்

தேர்தல் வெற்றிக்கான பிரார்த்தனைக்காக திருப்பதி செல்லும் ரணில்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வேண்டுதலுக்காக, இந்தியா திருப்பதி கோவிலுக்கும், குருவாயூரப்பன் கோவிலுக்கும் திருத்தல யாத்திரையை மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் 24ஆம் திகதி தனது பயணத்தினை ஆரம்பிக்கவுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்த பயணத்தின் போது, ரணிலின் பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவும், கட்சியின் நெருக்கமான உறுப்பினர்களும் செல்லவுள்ளனர்.

இந்தக் கோவில்களுக்கு சென்று வழிபட்டதன் மூலம் நல்ல பலனை முன்னர் அடைந்ததால், இம்முறை தேர்தலிலும் வெற்றிபெறும் நோக்கில் இந்த தலயாத்திரையை மேற்கொள்வதாக இவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

கடந்த தேர்தலின் போது, தலவழிபாடுகளை மேற்கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version