Tamil News
Home செய்திகள் இலங்கை இந்துக்களின் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் – இந்து அமைப்புக்கள்

இலங்கை இந்துக்களின் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் – இந்து அமைப்புக்கள்

இலங்கையில் நடைபெறும் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கு இந்தியா தலையிட வேண்டுமென இந்து அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள இந்துமா மன்றத்தில் இன்று (21) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஒன்றுகூடலில் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரமச்சாரி ஜாக்ரத சைத்தன்யா சுவாமிகள், அகில இலங்கை இந்துமா மன்றத் தலைவர் ஆறு திருமுருகன், மன்னார் இந்து குருமார் ஒன்றியத் தலைவர், இந்து குருமார் ஒன்றியம், அகில இலங்கை சைவ மகா சபை சைவ விருத்தியா சங்கம் ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டன.

இந்த ஒன்றுகூடலின் போது, திருக்கேதீஸ்வர ஆலய நுழைவு வீதியில் அமைக்கப்பட்ட வளைவு கத்தோலிக்கர்களால் அகற்றப்பட்டமைக்கும்,    இதனை மீளமைப்பதற்கு பிரதேச சபை தடையாக இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனை மீளமைப்பு செய்வதற்கு இந்தியா நிதியுதவி வழங்கியது போல, இந்தப் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என்றும் கேட்டுக் கொளளப்பட்டது.

Exit mobile version