Tamil News
Home செய்திகள் தேர்தல் கால தெருப்பேச்சு ; கல்முனையில் தமிழ் பிரதேச செயலகத்தை பெற்றுத்தருவோம்

தேர்தல் கால தெருப்பேச்சு ; கல்முனையில் தமிழ் பிரதேச செயலகத்தை பெற்றுத்தருவோம்

தமிழ் மக்களுக்கு நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வருகின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை நாம் ஆட்சிக்கு வந்ததும் பெற்றுத்தருவோம் என பாராளுமன்ற ஊறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று (22) கல்முனை நகருக்கு வருகைதந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அதிகமாக தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்தோம். ஆனால் இன்று தமிழ் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படாமல் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன.

மீண்டும் நாம் ஆட்சிக்கு வந்ததும் அதனை தொடர்வோம். ஏழு மாகாணங்களிலும் மக்கள் எமக்கு அமோக ஆதரவை வழங்கியுள்ளனர். இந்நிலையில் வடக்கும், கிழக்கும் பிரிந்து நின்று எதனையும் சாதிக்கப் போவதில்லை. கல்முனையில் தமிழ் மக்கள் கோரி நிற்கும் பிரதேச செயலகத்தை பெற்றுத்தருவோம். ஐ.தே.கட்சி வேட்பாளர் சஜித்திடம் நாட்டை அபிவிருத்திசெய்ய ஒரு முறையான கொள்கைத் திட்டம்இல்லை.

 

Exit mobile version