Tamil News
Home செய்திகள் தென்னிலங்கையில் மீண்டும் காவல்துறை பதிவுகள் ஆரம்பம்

தென்னிலங்கையில் மீண்டும் காவல்துறை பதிவுகள் ஆரம்பம்

கொழும்பின் புறநகர் பகுதியான நுகேகொடவில் மீண்டும் காவல்நிலையத்தில் மக்களை பதிவு செய்யும் நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுகேகொட பகுதியில் உள்ள வீடுகளுக்கு விண்ணப்பப் படிவங்களை வழங்கிய சிறீலங்கா காவல்துறையினர் வீடுகளில் தங்கியிருப்பவர்கள் குறித்த விபரங்களை 24 மணி நேரத்திற்குள் பதிவு செய்து காவல்நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

போர் இடம்பெற்ற காலத்தில் இவ்வாறான பதிவுகள் கொழும்பில் இடம்பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version