திக்கோடை விவசாய போதனாசிரியர் எஸ்.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் உதவி விவசாய பணிப்பாளர்களான எஸ்.சித்திரவேல் திருமதி.நித்தியா நவரூபன் தெற்கு வலய விவசாய போதனாசிரியர்கள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் போரதீவுப்பற்று அக்றோ பரடைஸ் கம்பனியின் தவிசாளர் ஆலய பரிபாலன சபையினர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பிரதேச விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது விவசாயிகள் குறைகள் மற்றும் தேவைகள் கேட்டறியப்பட்டதுடன் அவற்றுக்கான தீர்வுகள் விரைவாக பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் பிரதி விவசாய பணிப்பாளர் உறுதியளித்தார்.