Tamil News
Home செய்திகள் திலீபன் நினைவேந்தல் இன்று: தடையை அடுத்து நல்லுர், பல்கலைக்கழகத்தில் பொலிஸ் குவிப்பு

திலீபன் நினைவேந்தல் இன்று: தடையை அடுத்து நல்லுர், பல்கலைக்கழகத்தில் பொலிஸ் குவிப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் இன்று ஆரம்பமாகும் நிலையில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் நேற்று மாலை முதல் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிக்க யாழ். நீதிமன்றம் நேற்று தடைவிதித்தது. இதனையடுத்து, நேற்று மாலை முதல் திலீபன் நினைவேந்தல் நடைபெறும் எனக் கருதும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லூரிலுள்ள திலீபனின் நினைவுத் தூபிமற்றும் யாழ். பல்கலைக்கழகப் பகுதிகளில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version