Tamil News
Home உலகச் செய்திகள் தமிழ்நாடு: கும்மிடிப்பூண்டி ஈழத் தமிழர் அகதிகள் முகாமில் கியூ பிரிவு பொலிஸார் விசாரணை

தமிழ்நாடு: கும்மிடிப்பூண்டி ஈழத் தமிழர் அகதிகள் முகாமில் கியூ பிரிவு பொலிஸார் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் அகதிகள் முகாம் உள்ளது.

இந்த முகாமில் தற்போது 912 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 741 தமிழர்கள் தங்கி உள்ளனர். இங்கு பதிவில் உள்ளவர்கள் உரிய அனுமதியின்றி வெளியிடங்களுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது முகாம் பதிவில் உள்ள சிலர் உரிய அனுமதியின்றி சென்னையின் புறநகர் பகுதிகளில் வசித்து வருவதாகவும், அதே சமயத்தில் முகாமில் பதிவு இன்றி பலர் தங்கியிருப்பதாகவும் மாவட்ட கியூ பிரிவு பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும்,  சட்டமுரணான சிலர் உரிய அனுமதியின்றி இலங்கை உள்பட பல்வேறு நாடுகளுக்கு செல்ல முயன்று பின்னர் கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு  மீண்டும் முகாமுக்கு கொண்டு வரப்படுவதும் அடிக்கடி நடைபெற்று வரும் செயலாக உள்ளது.

Exit mobile version