Home உலகச் செய்திகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரியா குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த லேபர் செனட்டர்

தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரியா குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த லேபர் செனட்டர்

கிறிஸ்மஸ் தீவில் பல மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் குடும்பம் விடுதலைசெய்யப்பட வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் லேபர் கட்சியின் உள்துறை விவகாரங்களுக்கான பேச்சாளர் செனட்டர் Kristina Keneally, இக்குடும்பத்தினரை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

பிரியா குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த லேபர் செனட்டர்!

முன்னதாக தகவல் தொடர்பு மற்றும் உட்கட்டமைப்பு விவகாரங்கள் தொடர்பில் ஆராய்வதற்கென செனட்டர் Kristina Keneally அடங்கிய நாடாளுமன்ற குழு கிறிஸ்மஸ் தீவிற்குச் செல்வதற்குத் திட்டமிட்டிருந்த நிலையில், பிரியா-நடேஸ் குடும்பத்தை தான் சந்திக்கவுள்ள செய்தியை அறிந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், நாடாளுமன்ற குழுவுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனி விமானத்தை இரத்துச் செய்துவிட்டதாக Kristina Keneally குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version