Tamil News
Home செய்திகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது அதிகாரத்தை  துஷ்பிரயோகம் செய்துள்ளார்-சுமந்திரன் குற்றச்சாட்டு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது அதிகாரத்தை  துஷ்பிரயோகம் செய்துள்ளார்-சுமந்திரன் குற்றச்சாட்டு

துமிந்த சில்வாவை விடுதலை செய்ததன் மூலம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது அதிகாரத்தை  துஷ்பிரயோகம் செய்துள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சேதனப் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்சாலையை வடமராட்சி முள்ளிப் பகுதியில் நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர், அங்கு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

16 தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சியான ஒரு விடயம்.

என்ன அடிப்படையில் ஏனையவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்று தெரியவில்லை. ஆனால் துமிந்த சில்வாவை சாட்டோடு சாட்டாக விடுவித்துள்ளமை கண்டனத்துக்குரியது. இது நீதிமன்ற சுயாதீனத்தை கேள்விக்கு உட்படுத்துகின்றது.

ஜனாதிபதி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் ” என்றார்.

மேலும் இந்த நிகழ்வில், அரசியல் கைதி ஆனந்த சுதாகரின் பிள்ளைகளுடன் கலந்துரையாடிய சுமந்திரன் அவரது விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version