Tamil News
Home செய்திகள் சுயேட்சைக் குழுவாக யாழில் களமிறங்குகின்றார் ஐங்கரநேசன்

சுயேட்சைக் குழுவாக யாழில் களமிறங்குகின்றார் ஐங்கரநேசன்

பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுவதற்காக, தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் உள்ளிட்ட மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வன்னி, யாழ்ப்பாணம், களுத்துறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் ஒன்பது சுயாதீனக் குழுக்கள், கட்டுப்பணத்தைச்
செலுத்தியுள்ளன.

வன்னி தேர்தல் மாவட்டத்தில், நாமல் லியனபத்திரண, நீல் சாந்த, எம்.பி.நடராஜா ஆகியோர் சுயாதீனக் குழுக்களாக போட்டியிடுவதற்காக கட்டுப்பணம்
செலுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மயில்வாகனம் விமல்தாஸ், பொன்னுத்துரை ஐங்கரநேசன், விக்டர் அன்டனி வில்லியம்ஸ் ஆகியோர் தலைமையிலான
மூன்று சுயாதீனக் குழுக்கள் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் உடவத்தகே மஹிந்த சில்வா என்பரின் சுயாதீனக் குழு கட்டுப் பணம் செலுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ரம்ழான் மொஹமட் இம்ரான், அசனார் மொஹமட் அஸ்மி ஆகியோர் தங்கள் சுயாதீனக் குழுக்கள் சார்பில் கட்டுப்பணம்
செலுத்தியுள்ளனர்

Exit mobile version