Home செய்திகள் சீரற்ற கால நிலையால் வேளாண்மை செய்கை பாதிப்பு

சீரற்ற கால நிலையால் வேளாண்மை செய்கை பாதிப்பு

IMG 20240113 WA0003 சீரற்ற கால நிலையால் வேளாண்மை செய்கை பாதிப்புசீரற்ற கால நிலை காரணமாக கிண்ணியா பகுதியில் உள்ள கல்லடி வெட்டுவான் வயல் நிலப் பகுதிகள் வீதிகள் பாதிப்படைந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாளும் நெற் செய்கை அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் பாரிய நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர். கல்லடிவெட்டுவான் கிரான் உள்ளிட்ட வேளாண்மைச் செய்கை நிலப்பகுதிகள் சுமார் 1000 க்கும் மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

கனமழை வெள்ள நீரின் அளவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் முழுமையான அழிவை சந்திக்க நேரிட்டதாக தெரிவிக்கின்றனர். விவசாயிகளுக்காக நஷ்ட ஈடுகளை வழங்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

 

Exit mobile version