Tamil News
Home செய்திகள் சிவகரனிடம் சி.ஐ.டி. இரண்டு மணி நேர விசாரணை

சிவகரனிடம் சி.ஐ.டி. இரண்டு மணி நேர விசாரணை

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆட்காட்டிவெளி மற்றும் பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லங்களில், 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்க ஏற்பாடு மேற்கொண்டமை தொடர்பாகத் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரனிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நேற்று இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் நிகழ்வை தொடர்ச்சியாக அரசுக்கு எதிராக நடத்தி வருவது தொடர்பாக இதன்போது சிவகரனிடம் சாட்சியம் பெறப்பட்டுள்ளதுடன், இது தண்டனைக்குரிய குற்றம் எனவும் இனி வரும் நாட்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் உடனடியாகக் கைது செய்வோம் எனவும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

Exit mobile version