Tamil News
Home செய்திகள் சிறீலங்காவுக்கு எதிர்ப்பைத் தெரிவித்த 31 நாடுகள்

சிறீலங்காவுக்கு எதிர்ப்பைத் தெரிவித்த 31 நாடுகள்

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா வெளியேறியதற்கு 31 நாடுகள் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக ஜெனீவா தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளும், கனடாவும் எதிர்ப்பைத் தெரிவித்த நாடுகளில் அடங்கியுள்ளன. சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

இனநல்லிணக்கப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு படையினரை மறுசீரமைப்பது தொடர்பில் சிறீலங்கா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், சிறீலங்கா வெளியேறினாலும், இணைஅனுசரணை நாடுகள் அடுத்த வருடம் இடம்பெறும் 46 ஆவது கூட்டத்தொடரில் தீர்மானம் ஒன்றை முன்வைப்பார்கள் எனவும் அவை மேலும் தெரிவித்துள்ளன.

Exit mobile version