Tamil News
Home செய்திகள் சிறிலங்கா அரச நிறுவன பெண் பணியாளர்கள் சேலை அணிய வேண்டும்

சிறிலங்கா அரச நிறுவன பெண் பணியாளர்கள் சேலை அணிய வேண்டும்

அரச நிர்வாகத்தில் பணிபுரியும் பெண்களின் ஆடை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு ஓர் முடிவை எட்டியுள்ளது. இதற்கமைவாக அரச நிர்வாக பெண் பணியாளர்கள் அனைவரும் சேலை அல்லது கண்டியச் சேலை (ஒஸரி) அணிந்தே பணிக்கு சமுகமளிக்க வேண்டும்.

கடமை நேரத்தில் அலுவலக வளாகத்தினுள் பெண்கள் சேலையுடனேயே சமுகமளிக்க வேண்டும். இதேவேளை ஆண் பணியாளர்கள் தமது கடமை நேரத்தில் காற்சட்டை மேற்சட்டை அல்லது தேசிய உடை அணிந்திருத்தல் வேண்டும்.

இவ்வாறு பொது நிர்வாக அமைச்சு ஓர் சுற்று நிருபம் வெளியிட்டுள்ளது.

 

 

 

 

 

 

Exit mobile version