இதன் போது முதல் நிகழ்வாக பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.
முதன்மை அதிதியாக கலந்து சிறப்பித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தமிழர் கலாச்சார நடனங்களுடன் அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. இதன்போது வரவேற்பு நடனம் வலைப்பந்தாட்ட போட்டி என்பன இடம் பெற்றது.
அதைவிட கிழக்கு மாகாண ஆளுநரின் சேவையினை பாராட்டி ஏற்பாட்டு குழுவினரால் நினைவுச் சின்னமும் பொன்னாடையும் பொருத்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் ஏனைய அதிதிகளாக மூதூர் பிரதேச செயலாளர் ,பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.