தாயை கவனித்துக்கொள்ள தன்னை இலங்கைக்கு அனுப்ப உத்தரவிடக்கோரி சாந்தன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, சாந்தன் தாயகம் திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பி உள்ளது. இலங்கை துணை தூதரகம் அனுப்பிய ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு அனுப்பிய ஆவணம் வந்து சேரவில்லை. இலங்கை அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இதையடுத்து சாந்தன் தாக்கல் செய்த மனுவை பிப்.29-ந்தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.