Home செய்திகள் சாணக்கியன் எம்.பி மீது தாக்குதல் முயற்சி – மொட்டு உறுப்பினா் ரோஹித மீது குற்றச்சாட்டு

சாணக்கியன் எம்.பி மீது தாக்குதல் முயற்சி – மொட்டு உறுப்பினா் ரோஹித மீது குற்றச்சாட்டு

3 7 4 சாணக்கியன் எம்.பி மீது தாக்குதல் முயற்சி - மொட்டு உறுப்பினா் ரோஹித மீது குற்றச்சாட்டுபொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன என்னை அச்சுறுத்தியதோடு தாக்க முற்பட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் செல்லும் வழியில் ‘நீர் எவ்வாறு எமது நாட்டின் பிரதமரை சந்திக்கலாம்’ என்று கூறி தாக்க முற்பட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான இனவாதிகள் நாட்டில் இருக்கும் வரை எவ்வாறு எமது மக்களுக்கான நீதி கிடைக்கும்? தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே இந்நாட்டில் இல்லை உயிருக்கு உத்தரவாதம் சாதாரண மக்களின் நிலை எவ்வாறு இருக்கும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனது சிறப்புரிமை மீறியமைக்காக நாடாளுமன்றத்தில் எனது வாக்குமூலம் பதியப்பட்டதென சாணக்கியன் தெரிவித்தார்.

Exit mobile version