Tamil News
Home செய்திகள் சர்ச்சைக்குரிய வீடு! சிக்கலில் ரிசாத் பதியூதீனின்

சர்ச்சைக்குரிய வீடு! சிக்கலில் ரிசாத் பதியூதீனின்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் வங்கிக் கணக்கு அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரிசாத்தின் மனைவி மற்றும் அவரின் சகோதரர்களுள் ஒருவரான ரியாஜ் பதியுதீனின் வங்கிக் கணக்கு அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆவணங்கள் மீட்கப்பட்டதாக கூறப்படும் வெள்ளவத்தை வீடு தொடர்பான வழக்கு விசாரணையின் முன்னேற்ற அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version