Tamil News
Home செய்திகள் கோட்டாபயவுடன் தொலைபேசியில் உரையாடிய சீன அதிபர்

கோட்டாபயவுடன் தொலைபேசியில் உரையாடிய சீன அதிபர்

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் தொலைபேசியில் முக்கிய உரையாடலை நடத்தினர் எனச் சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு தொலைபேசியில் இடம்பெற்ற இந்த உரையாடலில் கோவிட் வைரஸைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நடைமுறை ஒத்துழைப்பை இரு நாடுகளும் மேம்படுத்த வேண்டும் என்று சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் சீன ஜனாதிபதி ஸ்ரீலங்காவில் பாரிய திட்டங்களை முன்னெடுப்பதற்கும், ஒரு வழி சாலையில் கட்டுமான பணிகளின் உயர் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் சீனாவின் ஒத்துழைப்பு தொடர்ந்து கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version