Tamil News
Home உலகச் செய்திகள் கொரோனா வைரஸ் – அமெரிக்காவில் இரண்டாவது மரணம்

கொரோனா வைரஸ் – அமெரிக்காவில் இரண்டாவது மரணம்

சீனாவின் வுகான் மாநிலத்தில் உருவாகிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் எங்கும் பரவிவருகின்றது. இந்த நிலையில் இதன் தாக்கத்திற்கு அமெரிக்காவில் இருவர் பலியாகியுள்ளதாக அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 48 மணிநேரத்திற்குள் இருவர் இறந்துள்ளதுடன், கலிபோர்னியாவில் 5 பேர் தொற்றுதலுக்கு உள்ளாகி உள்ளனர். 70 வயதான ஆண் ஒருவரே வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் வைத்தியசாலை பணியாளர்கள் என்பதால் அவர்கள் அணியும் பாதுகாப்பு அங்கிகளில் குறைபாடுகள் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் பாதுகாப்பு அங்கிகள் தேவையில்லை என அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகின்றது. எனினும் மக்களின் தேவையை நிறைவுசெய்யும் அளவுக்கு தம்மிடம் பாதுகாப்பு அங்கிகள் இல்லை என அமெரிக்க நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரையில் 3,000 பேர் பலியாகியுள்ளதுடன், 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. ஈரானில் 50 பேரும் இந்தாலியில் 30 பேரும் பலியாகியுள்ளனர்.

எனினும் வருடம்தோறும் பரவிவரும் வைரஸ் பருவக்காச்சலுடன் ஒப்பிடும் போது இந்த வைரசின் தாக்கம் குறைவானது என தெரிவிக்கப்படுகின்றது. வருடம் தோறும் பரவிவரும் பருவக் காச்சலினால் 400,000 பேர் மரணமடைந்து வருகின்றனர். அதனுடன் ஒப்பிடும்போது கொரோனா வைரசின் தாக்கம் 1 விகிதமாகும்.

Exit mobile version