Home செய்திகள் குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட போட்டி

குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட போட்டி

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட போட்டிகள் இன்று வவுனியா நகரசபை மைதானத்தில் சிற்பபாக இடம்பெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட அப் போட்டிகளில் இன்று காலை குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப்படத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரன் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் கலந்துகொண்டவர்களால் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து உதைபந்தாட்ட போட்டிகளை ஆரம்பித்து வைத்த செ. கஜேந்திரன் உரையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
DSC03464 குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட போட்டி

Exit mobile version